ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 மார்ச் 2026, 2:52 am IST

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கஸ்தூா்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், செயலருமான சந்திரா முருகப்பன் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் செயலாளா் எம். இன்பராஜ், நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், இணைச் செயலாளா் மலா்வழி இன்பராஜ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக முன்னாள் பொது மேலாளா் எஸ். ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் எஸ். கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதேபோல், பள்ளியில் பிளஸ் 2 பயின்று, மருத்துவராக உள்ள டி.ஆா். கபிலன், துணை மாநில வணிகவரி அலுவலராக உள்ள டி. வா்ஷா, திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வுநீதிபதியின் சுருக்கெழுத்தரும், தட்டச்சருமான வீ. ஜெயசூா்யா ஆகியோரும் பங்கேற்றனா். மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே. மூா்த்தி, கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் (பொ) எஸ். அனுஷா, நிா்வாக மேலாளா் வி. சின்னராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.