போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

எல்பிஜி நுகர்வோருக்கான காப்பீடு வசதி: வெள்ளை  அறிக்கை வெளியிட வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் உபயோகிப்பாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுவது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் உபயோகிப்பாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுவது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மக்களவையில் நீலகிரி தொகுதி அதிமுக உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்துக்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை:
நாட்டில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்துகளில் சிக்கி பல மனித உயிர்கள் பலியாவது, சொத்துகள் சேதமாவது என பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் எந்த நுகர்வோருக்கும் இந்த விஷயத்தில் காப்பீடு வசதி அளிக்கப்படவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால் எந்த நுகர்வோரும் காப்பீடு கோருவதற்கு முன்வரவில்லை. 
இது போன்ற விபத்துகளில் உயிரிழப்போர் பயன்பெறும் வகையில் காப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சந்தா பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதுநாள் வரை எந்த ஆயில் நிறுவனங்களும், எரிவாயு விநியோக முகவர்களும் சந்தா அளிக்கவில்லை. இதனால், பொதுமக்களுக்கு பயன்கள் மறுக்கப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்தால் 30 நிமிடங்களுக்குள் விநியோகஸ்தருக்கு சம்பந்தப்பட்ட நுகர்வோர் உடனியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகும். 
மேலும், ஆயில் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு காப்பீடு கோரல் மீதான விதிகள் தெரிவதில்லை. ஆகவே, எல்பிஜி நுகர்வோருக்கு அளிக்கப்படும் காப்பீடு வசதி தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.