சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ராகுல் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம்: ரஃபேல் விவகாரம்

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ரஃபேல் விவகாரம் தொடர்பாக பாஜக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே பாஜக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி பேசுகையில், "கெளரவமான பாரதம், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பாரதம், இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய பாரதம் ஆகியவற்றை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி பாடுபட்டு வருகிறார். 
செய்தியாளர்களிடம் சுயமாகப் பேசுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இயலவில்லை. முதலில் பொய் சொல்லவும், பொய்களின் மாயையில் மக்களை ஆழ்த்தி வைக்கவும் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. இவ்வாறு பொய்களை கூறியிருந்தால் பாஜகவால் ஹரியாணா உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்க முடியாது. வளர்ச்சி இந்தியா குறித்து பாஜக அக்கறை கொண்டுள்ளது. 
ஆனால், மக்களைப் பிரித்தாள காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் பதவியேற்ற போது, உள்ளூர் வேலைவாய்ப்புகளில் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதே இதற்கு உதாரணமாகும். 
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்திய பிறகும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லி பாஜக எம்பிக்கள் பிரவேஷ் வர்மா, உதித் ராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் அலுவலகம் நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற மனோஜ் திவாரி உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.