பருவமழையால் பரவும் தொற்று நோய்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கருத்தரங்குகள், பிரசாரம் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லியில் பருவமழை இன்னும் சில நாள்களில் ஆரம்பமாகவுள்ளது. பருவமழைக் காலங்களில் தில்லியில் டைஃபாயிடு, சிக்குன்குனியா, காலரா, வயிற்றுப்போக்கு, மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் அதிக அளவில் பரவுகின்றன.
இந்த நோய்களால் தில்லியில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த நோய்களைத் தடுப்பதற்கான முன் ஏற்பாடு நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதிகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. இக்கருத்தரங்குகளில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு, நோய்த் தொற்று தொடர்பாக எடுத்துரைப்பர்.
மேலும், வீடு வீடாகச் சென்று பருவமழையால் பரவும் நோய்கள் தொடர்பாக பிரசாரமும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பிரசாரத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் பங்கேற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 5.80 கோடி தங்கம் பறிமுதல்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவா் கைது
கஞ்சா விற்ற இலங்கைத் தமிழா் கைது

ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


