வடக்கு தில்லியில் உள்ளஅரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி (டிப்திரியா) தடுப்பு ஊசி இல்லாத காரணத்தால் 21 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி போலீஸுக்கு தில்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த தொடர்பாக ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், வடக்கு தில்லி காவல் துறை இணை ஆணையருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது:
வடக்கு தில்லி, கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் உள்ள மஹரிஷி வால்மீகி மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோயால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த நோயை தடுப்பு ஊசியின் மூலம் சுலபமாக தடுத்துவிடலாம்.
ஆனால், இந்த தடுப்பு ஊசிகளை வடக்கு தில்லி மாநகராட்சி வாங்காததால், கடந்த 9 மாதங்களாக மருத்துவமனையில் தடுப்பு ஊசிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த மருத்துவமனையில் சுகாதார சீர்கேடும் இருந்துள்ளது. தொண்டை அழற்சி நோய் தடுப்பு ஊசிகள் போதிய அளவில் வாங்காத காரணத்தால்தான் இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. தடுப்பு ஊசிகளை வாங்க ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு தில்லி மாநகராட்சி தவறாக கையாண்டு இருக்கலாம்.
இது கிரிமினல் அலட்சியமாகும். தவறு செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கையும், அரசு நிதியை தவறாக கையாண்டதாகவும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை ஜனவரி 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இல்லையென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!

திமுகவை ஏன் கேள்வி கேட்கவில்லை? பத்திரிகையாளரை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


