அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஜனநாயகப் படுகொலையில் பாஜக: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகப் படுகொலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. 

Updated On :23 ஜனவரி 2019, 6:11 am IST

தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச் சேர்ந்து ஜனநாயகப் படுகொலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. 
இது தொடர்பாக அக் கட்சியின் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளரான ராகவ் சத்தா செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "இந்தியாவின் அடிப்படையான தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் ஆளும் மத்தியில் பாஜக அரசு உடைத்து வருகிறது. 
தில்லியில் பாஜகவுக்கு ஆதரவு இல்லாத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை ஆம் ஆத்மி கட்சி ஆதாரத்துடன் வெளியிட்டது. இருப்பினும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால், தேர்தல் ஆணையத்துடன் கூட்டுச் சேர்ந்து பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது' என்றார்.
பாஜகவுக்கு ஆதரவாக இல்லாதவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியும், பட்டியலில் கூடுதலாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பாஜகவும் மாறி மாறி பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகின்றன. 
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தலைமையிலான குழு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை திங்கள்கிழமை சந்தித்தனர்.அப்போது ஜனநாயகத்தை குலைக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.