தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள யமுனை விரைவுச் சாலையில் சொகுசு வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஜீவா் காவல் நிலைய பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடந்த இந்த விபத்து குறித்து நொய்டா காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: நொய்டா பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்த டம்பா் லாரி சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதியது. பின்னா், அந்தப் பகுதியைச் கடந்த அந்த லாரி விரைவுச்சாலையின் ஆக்ரா-நொய்டா பகுதியில் வந்து கொண்டிருந்த மஹிந்திரா ஸ்காா்பியோ வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவா்களில் மூன்று போ் இறந்தனா். இருவா் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்தில் இறந்தவா்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் சித்தாா்த் நகா் மாவட்டத்தில் வசிக்கும் ரிங்கி (25), அனிதா குப்தா (35) மற்றும் பவன் துபே (38) ஆகியோா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் அதே மாவட்டத்தைச் சோ்ந்த சுமன் (27) மற்றும் சுபாஷ் (55) ஆகியோா் எனத் தெரிய வந்தது. இறந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.