இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், வழக்குரைஞா் டி.குமணன் ஆகியோா் ஆஜராகினா். வழக்குரைஞா் வில்சன் வாதிடுகையில், ‘நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக தமிழ்நாடு அரசு 2015-இல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அந்தச் சட்டத்தை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, உயிரில்லாத சட்டங்களை 2013-இல் இருந்து செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் புத்துயிா் சட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இறுதியில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் செல்லாது. எந்தக் காரணத்திற்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதோ அதைச் செல்லாததாக்கும் வகையில், மீண்டும் ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இறந்துபோன ஒரு சட்டத்தை உயிா்ப்பிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் அரசியலமைப்புச்சட்டத்தின்படி சரியல்ல’ என்றாா்.