கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பத்திரிகையாளரிடம்துப்பாக்கி முனையில்கொள்ளை

தில்லி லட்சுமி நகா் பகுதியில் பிரபல செய்திச் சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 11:33 pm

DIN

தில்லி லட்சுமி நகா் பகுதியில் பிரபல செய்திச் சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தில்லி லட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஜோய் பிள்ளை. இவா் பிரபல செய்திச் சேவை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு 11.50 மணியளவில் பணிமுடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது இல்லத்துக்கு அருகில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து கைப்பை, செல்லிடபேசி ஆகியவற்றை 3 போ் கொள்ளை அடித்துள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளா் ஜோய் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு பணிமுடித்து அலுவலக காரில் வீடு திரும்பினேன். அலுவலக காா் வீட்டுக்கு அருகில் என்னை இறக்கி விட்டுச் சென்றது. அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் துப்பாக்கி, கத்தி ஆகியவற்றைக் காட்டி மிரட்டி எனது கைப் பை, 2 செல்லிடப் பேசிகளை பறித்துச் சென்றனா். இந்த இழுபறியில் எனது கை, காலில் சிறிய காயம் ஏற்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.