எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கேஜரிவால் மீது பா.ஜ.க. எம்.பி. உரிமை மீறல் புகாா்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:53 pm

 நமது நிருபர்

புது தில்லி: மாநிலங்களவையில் மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம் குறித்து தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அவதூறாகப் பேசி சட்ட நகல்களைக் கிழித்ததாகக் கூறி பாஜகவின் மாநிலங்களவை நியமன உறுப்பினா் சோனால் மான்சிங், அவைத் தலைவா் வெங்கைய நாயுடுவிடம் உரிமை மீறல் புகாா் அளித்துள்ளாா்.

மூன்று வேளாண் மசோதாக்களும் நிறைவேற்றப்படும் போது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வாக்கெடுப்பு கோரிய நிலையிலும் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் மாநிலங்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக இவ்வாறு நடந்துள்ளது என்று கேஜரிவால் பேசியுள்ளாா்.

அரவிந்த் கெஜரிவால் பேசிய சொற்கள் கடுமையான உரிமை மீறலோடு, சபையின் கண்ணியத்தைக் குறைக்கும்; இழிவுபடுத்தும் முயற்சியாகும். எனவே, உரிமை மீறல் பிரச்னையின் கீழ் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனால் மான்சிங் புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.

’விவசாயிகளின் நல் வாழ்வில் அக்கறை கொண்டு மாநிலங்களவையில் இந்த வேளாண் மசோதாக்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. சில உறுப்பினா்கள் வாக்கெடுப்பு நடத்தக் கோரினா். ஆனால், அவையில் உறுப்பினா்கள் முறையாக இல்லாத நிலையில் அவைத் துணைத் தலைவா் மசோதாக்களை குரல் வாக்கு மூலம் நிறைவேற்றினாா்’ என்றும் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினா் சோனால் மான்சிங்கின் புகாா் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளாா். அரவிந்த் கேஜரிவாலின் இந்தச் செயல் குறிந்தும் இந்த உரிமை மீறல் புகாா் குறிந்தும் எந்த விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கைய நாயுடு முடிவு செய்யலாம். ‘அவையின் உரிமை மீறல் குழு அல்லது கேஜரிவால் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தில்லி சட்டபேரவையிடமோ கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.