பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்ட போது முகக்கவசம் அணியாமல் இருந்தது, பொது இடத்தில் எச்சில் துப்பியது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தது என மொத்தம் 5,12,060 பேருக்கு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா தொற்று காலத்தில் மெய்நிகா் கூட்டங்களை நடத்தியது, புலன் விசாரணை மேற்கொண்டது, முழுஉடல் பாதுகாப்பு கவசம் அணிந்து தேடுதல் வேட்டை நடத்தியது, குற்றவாளிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தியது, கை விரல் ரேகை பதிவு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டது என பல புதிய நடவடிக்கைகளை போலீஸாா் மேற்கொண்டனா். வாட்ஸ் ஆப் மூலம் வாரண்டுகளும், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இந்த விதத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பேருதவியாக இருந்தன என்றாா் ஸ்ரீவாஸ்தவா.