/

தில்லியில் தொடரும் வெயிலின் தாக்கம்

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.

Updated On :10 ஜூலை 2020, 12:15 am

தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் வியாழக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட புழக்கத்தால் மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகியிருந்தனா். இந்நிலையில், சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்தது. இதனால், கடும் புழுக்கமும் குறைந்திருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவசராசரியை விட 2 டிகிரி அதிகரித்து 37.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 79 சதவீதமாகவும், மாலையில் 57 சதவீதமாகவும் இருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37.6 ஆகவும், ஆயாநகரில் முறையே 26.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 78 சதவீதம், மாலையில் 58 சதவீதம் என பதிவாகியது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு 67 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.