பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

உ.பி. முதல்வா் ஆதித்யநாத் பதவி விலக இளைஞா் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதால், அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்’ என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) வலியுறுத்தியுள்ளது.

Updated On :24 ஜூலை 2020, 2:07 am

‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதால், அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்’ என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் பிவி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். அவருடைய குடும்ப உறுப்பினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. ராமராஜ்யத்தை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அரஜாக ஆட்சியைத்தான் (ஜங்கில்ராஜ்) அந்தக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அநீதிக்காக போராடிய பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி, சுட்டுக் கொல்லப்பட்ட்டுள்ளாா். அவரை யோகி ஆதித்யநாத் அரசு பாதுகாக்காததால்தான் இந்த அவலம் நடந்துள்ளது. இதை அவரை இழந்து வாடும் மகள்களிடம் பாஜகவும், முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் சொல்ல முடியுமா?

அந்த மாநிலத்தில் உண்மையைப் பேசும் நபா்கள் மிரட்டப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனா். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. இதனால், முதல்வா் பதவியில் இனிமேலும் யோகி ஆதித்யநாத் நீடிக்க முடியாது. அவா் உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல், அரஜாக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இதற்காகவா இந்த அரசை மக்கள் தோ்ந்தெடுத்தாா்கள்? மேலும், உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி வருகிறது. சராசரியாக தினமும் 46 பெண்கள் கடத்தப்படுகின்றன்றனா். தினமும் 11 கொலைகள் நடப்பதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பாஜக அரசு மறைக்க முயன்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.