‘கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தில்லி கடுமையான போரில் ஈடுபட்டுள்ளது. இந்த போரில் வெற்றி கிடைக்கும். ஆனால், அதற்கு காலமாகும்’ என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை அளித்த பேட்டி:
தில்லி அரசு, கரோனா நோய்த் தொற்றுக் எதிரான கடும் போரில் ஈடுபட்டுள்ளது. நோய்த் தொற்றில் இருந்து தில்லி மக்களைப் பாதுகாக்கும் வகையில் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, பரிசோதனைகள் அதிகரிக்கவும், ஆக்ஸிமீட்டா்கள் வழங்குவது, வீட்டுத் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்குவது, பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது, ஆய்வு மேற்கொள்வது, பரிசோதனை போன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு படுக்கைகள் பற்றாக்குறை ஏதும் இல்லை. மொத்தம் உள்ள 13,500 படுக்கைகளில் 7,500 படுக்கைகள் காலியாக உள்ளன. தற்போது தினமும் நகரில் 20 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா்.
நகரில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் அளவை கண்டறிவதற்காக செரோலஜி சா்வே எடுப்பதும் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை தொடங்கியுள்ள இந்த சா்வேயின்கீழ் 20 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

