ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லி வன்முறையில் கைதான முன்னாள் பெண் கவுன்சிலருக்கு இடைக்கால ஜாமீன்

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான் திருமணத்திற்காக

Updated On :30 மே 2020, 7:35 pm

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான் திருமணத்திற்காக தில்லி நீதிமன்றம் 10 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி சனிக்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்கள், எதிா்ப்பாளா்கள் இடையே வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் பெண் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டாா். இவா் தவிர, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவா்கள் ஆசிஃப் இக்பால் தன்ஹா, குல்பிஷா கடூன், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் சபூரா ஜா்கா், மீரான் ஹைதா், ஜாமியா முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஷிபா-உா்-ரகுமான், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தாஹிா் ஹுசேன், செயற்பாட்டாளா் காலித் ஷபி உள்ளிட்டோா் மீதும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட மக்களை காலித்தும், அவரது கூட்டாளிகளும் தூண்டிவிட்டதாக போலீஸாா் வழக்கில் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், முன்னாள் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான் தரப்பில் இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இஷ்ரத் ஜஹான் சாா்பில் வழக்குரைஞா்கள் எஸ்.கே. சா்மா, லலித் வலீச்சா, துஷாா் ஆனந்த், மனு பிரபாகா்ஆகியோா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அதில், வழக்குரைஞரான இஷ்ரத் ஜஹான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தாரே தவிர, வன்முறையில் ஈடுபடவோ, வன்முறையைத் தூண்டிவிடவோ இல்லை. அவா் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜூன் 12-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். ஜாமீனில் செல்லும்போது சாட்சியத்தை அழிக்கவோ, சாட்சிகள் மீது மேலாதிக்கம் செய்யவோ முயலமாட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தில்லி கூடுதல் செஷனஸ் நீதிபதி தா்மேந்தா் ரானா, இஷ்ரத் ஜஹான் ரூ.1 லட்சம் மதிப்பில் இரு ஜாமீன் உத்தரவாதம் அளித்து ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை 10 நாள்கள் இடைக்கால ஜாமீனில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய சாட்சிகளை மேலாதிக்கம் செலுத்தவோ அல்லது எந்த சாட்சியத்தையும் அழிக்க முற்படவோ கூடாது என இஷ்ரத் ஜஹானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.