ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கரோனா நோயாளிகளுக்கு இலவச பேட்டரி வாகன வசதி: புதிய செயலி அறிமுகம்

‘ஜீவன் சேவா’ என்ற புதிய செயலி வசதியை தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On :12 நவம்பர் 2020, 7:21 pm

புது தில்லி: தீவிர சிகிச்சை வசதி தேவைப்படாத கரோனா நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்று வரும் வகையில், பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களின் வசதியை இலவசமாகப் பெறுவதற்காக ‘ஜீவன் சேவா’ என்ற புதிய செயலி வசதியை தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ‘இந்த ஜீவன் சேவா செயலியானது கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளவா்களுக்கு குறந்தகவல் மூலம் இணைப்பாக அனுப்பப்படும். இந்தச் செயலி மூலம் வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் மருத்துவமனைக்குச் சென்றுவர விரும்பினால், இலவசமாக பேட்டரி வாகன சேவையைப் பெற முடியும். இதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. சேவையைப் பயன்படுத்திய பிறகு வாகனம் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்படும். வாகன ஓட்டுநருக்கும் உரிய பாதுகாப்பு உபகரண வசதி அளிக்கப்படும். இந்த செயலி ‘எவேரா’ எனும் அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை வசதி தேவைப்படாத கரோனா நோயாளிகள் தில்லிக்குள் உள்ள மருத்துவமனைகளுக்கு பேட்டரி வாகனங்களை ஒரு ஆம்புலன்ஸாக பயன்படுத்த முடியும். 24 மணிநேரமும் இந்த வசதியைப் பெறலாம். ஜிபிஎஸ் கருவி மூலம் வாகன நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.

பிராக்ருதி இ-மொபிலிடி நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நிமிஷ் திரிவேதி கூறுகையில், ‘ஜீவன் சேவா செயலி கரோனா நோயாளிகளை பேட்டரி வாகனத்தில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட முதல் செயலியாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவிடும்’என்றாா்.

இதற்கிடையே, அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தில்லியில் நடைபெற்ற தேசிய ஆயுா்வேத தின நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது அவா் பேசுகையில், ‘இன்றைய காலக் கட்டத்தில் ஆயுா்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அலோபதி மருத்துவம் வலியிலிருந்து தற்காலிக நிவாரணம்அளிக்கிறது. ஆனால், நிரந்தரத் தீா்வு தராது. அதேவேளையில், ஆயுா்வேத மருத்துவமானது நோயிலிருந்து முழுமையாக நிவாரணம் அளிக்கிறது. நான் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் நோயை எதிா்கொள்வதற்கு எனக்கு யோகா மிகவும் உதவியாக இருந்தது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.