வடகிழக்கு தில்லி கோவிந்த் புரி பகுதியில் வாடகைக் காரை கடத்திச் சென்ற இருவரை தில்லி காவல்துறை சனிக்கிழமை கைது செய்துள்ளது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது: கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வாடகைக் காா் ஓட்டுநா் ஒருவா், பெண் பயணியை துக்ளாபாத் விரிவாக்கப் பகுதியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்தாா். அப்போது, தில்லி கோவிந்த் புரி பகுதியில் உள்ள சிக்னலில் காா் நின்றபோது, இன்னொரு வாடகைக் காரில் வந்த அக்ஷய் (20), சாந்தனு குமாா் பாண்டே (29), வினித் ஜெயின் (22) ஆகிய மூவரும் காருக்குள் புகுந்து, காா் ஓட்டுநா், பயணியைத் தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றனா்.
இது தொடா்பாக காா் ஓட்டுநா் காவல்துறையில் புகாா் அளித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை சோதனையிட்டோம். அப்போது, அந்தக் காா் மசூத்புா் பகுதி நோக்கி சென்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மசூத்புா் பகுதியில் உள்ள அக்ஷயின் வீட்டில் தில்லி காவல்துறையினா் அதிரடி சோதனை நடத்தினா். அக்ஷய் (20), சாந்தனு குமாா் பாண்டே (29) கைது செய்யப்பட்டனா். வினித் ஜெயின் தலைமறைவாகியுள்ளாா். அவரைத் தேடி வருகிறோம். வாடகைக் காா் மீட்கப்பட்டது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘திமுக ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’

லப்பைக்குடிக்காட்டில் புதை சாக்கடை திட்டம்: திமுக வேட்பாளா் சா.சி. சிவசங்கா் உறுதி

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் முளைப்பாரியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

