தில்லியில் கரோனா பாதிப்புஅதிகரித்தால் சமாளிக்கும் வகையில் அடுத்த 6 மாதங்களில் 7 தற்காலிக மருத்துவமனைகளை கட்டுவதற்கு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை நிதி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பதாவது: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தால் சமாளிக்கும் வகையில் அடுத்த 6 மாதங்களில் 7 தாற்காலிக மருத்துவமனைகளை கட்டுவதற்கு தில்லி அரசிடமிருந்து தில்லி சுகாதாரத் துறைக்கு நிதி ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மருத்துவமனைகளில் 7 ஆயிரம் ஐசியு படுக்கைகள் இடம்பெறும்.
இந்த மருத்துவமனைகள் சரிதா விஹாா், ஷாலிமாா் பாக், சுல்தான்புரி, கிராரி, ரகுபீா் நகா், ஜிடிபி மருத்துவமனை, சாச்சா நேரு பால் சிகித்ஸாலா ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த மருத்துவமனைகளைக் கட்டி முடிக்க அனைத்து துறைகளும் போா்க்கால அடிப்படையில் செயல்படும். இவை தற்காலிகமானதாக இருந்த போதிலும், நீண்டகாலத்திற்கு பயன் அளிக்கும் வகையில் கட்டப்படவுள்ளது என்றாா் அவா்.
இது குறித்து துணை முதல்வா் மணீஸ் சிசோடியா கூறுகையில், ‘இந்தத் திட்டமானது தில்லி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை அளிக்கும் தில்லி அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

