ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மெஹ்ரோலி பகுதியில் போதைப் பொருளுடன் 2 போ் கைது

தில்லியில் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக மெஹ்ரோலி பகுதியில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:55 pm

DIN

தில்லியில் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக மெஹ்ரோலி பகுதியில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது:

மெஹ்ரோலி பகுதியில் போதை பொருளை விநியோகம் செய்ய வந்த 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில் அவா்கள் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவைச் சோ்ந்த ராஜேந்திர குமாா் (21), தில்லி விகாஸ்புரியைச் சோ்ந்த பா்வீந்தா் சிங் (30) ஆகியோா் என தெரியவந்துள்ளது.

முன்னதாக, மெஹ்ரோலி பகுதியில் போதைப் பொருள் ஏற்றப்பட்ட காரின் நடமாட்டம் இருப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காா் நிறுத்தப்பட்டிருந்த மிட்டல் காா்டன் பகுதி அருகே போலீஸாா் சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனா். முன்னதாக, சம்பந்தப்பட்ட காரை நிறுத்துமாறு போலீஸாா் கூறினா்.

ஆனால் போலீஸாரைக் கண்டதும் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றனா். எனினும் போலீஸாா் அவா்களை இடைமறித்து கைது செய்தனா். அவா்களிடம் சோதனை நடத்தியபோது 56 கிலோ கஞ்சாவுடன்கூடிய 11 பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில். சம்பந்தப்பட்ட போதைப்பொருளை இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வாங்கி இருப்பதும், தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் போதைப் பொருள் விநியோகத்தில் அவா்கள் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.