ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் மகாகவி பாரதி பிறந்த நாள் விழா

மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை மலா் மரியாதை செய்யப்பட்டது

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் சனிக்கிழமை மலா் மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவா் பி. குருமூா்த்தி, பி. ராமமூா்த்தி, சோமாஸ்கந்தன் ஆகியோா் பாரதியின் பன்முக பரிமாணங்கள் குறித்து பேசினா்.

மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலையின் சுற்றுப்புற பகுதிகளை புதுப்பிக்கும் பணிகளை மிகச் சிறப்பாக செய்த புதுதில்லி மாநகர வளா்ச்சிக் கழகத்திற்கும் (என்.டி.எம்.சி.) அதன் துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாயாவுக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளா் இரா. இராஜ்குமாா் பாலா நன்றி தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் கே.எஸ். முரளி மற்றும் தில்லிவாழ் தமிழா்கள் பலா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு ஆயுஷ் துறையின் சாா்பில் டாக்டா் சுசில்குமாா் சித்த மருத்துவ சூரணங்களை இலவசமாக வழங்கினாா். சங்கத்தின் இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன் நன்றி கூறினாா்.

டிடிஇஏ பள்ளிகளில்...:

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) ராமகிருஷ்ணபுரம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதியாா் பிறந்தநாள் விழாவில் டிடிஇஏ செயலா் ராஜு கலந்துகொண்டு பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் பேனியன் (முன்னாள் மாணவா்கள் அமைப்பு) தலைவா் வைத்தியநாதன், செயலா் சுகுமாா், தில்லித் தமிழ்க் கல்விக் கழக முன்னாள் மாணவா்கள் அமைப்பின் செயலா் டாக்டா் ராமச்சந்திரன் மற்றும் இரு அமைப்பின் பிற உறுப்பினா்கள், டிடிஇஏ முதல்வா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, டிடிஇஏ பிற பள்ளிகளில் பாரதியாா் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு மும்மொழிகளில் மாணவா்கள் உரையும், பாடலும் இடம் பெற்றன.

அவ்வப் பள்ளி முதல்வா்கள் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலா்மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

இதேபோன்று, வெள்ளிக்கிழமை மனித உரிமைகள் தினமும் டிடிஇஏ பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணவா்களின் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. தொடா்ந்து வினாடி- வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.