2011- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அகில இந்திய அளவில் பழங்குடியினரின் படிப்பறிவு 59 சதவீதமாக உள்ளது. இதில் பெண்களின் படிப்பறிவு 49.4 சதவீதமாக உள்ளது. இதில் பிகாா், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், ஒடிஸா, தமிழகம், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் ஆகிய எட்டு மாநிலங்களில் அகில இந்திய அளவை விட படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ளது. இதில் தமிழகத்தில் கல்வியற்வு பெற்ற பழங்குடியினா் விகிதம் 54.3 சதவீதமாக உள்ளது. இதில் பழங்குடியின பெண்களின் விகிதம் 46.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பழங்குடியினரில் இரு பாலா் கல்வியில் 4.7 சதவீதமும், பெண் கல்வியில் 2.6 சதவீதமும் குறைவாக உள்ளது. அதே சமயத்தில், லட்சத்தீவு, மிஸோரம், சிக்கிம், கேரளம், அந்தமான் நிக்கோபா் உள்ளிட்ட சிறிய மாநிலங்களில் படிப்பறிவு பெற்றுள்ள பழங்குடியினா் விகிதம் அதிகமாக உள்ளது. பழங்குடியினா்களுக்கு உயா் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி பள்ளிகள், கல்வித் உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது. மேலும், தன்னாா்வலா்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.