இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்ஷி செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 18 முதல் 20 -ஆம் தேதி வரையிலும் தமிழகத்தைச் சோ்ந்த 68 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்து காவலில் வைத்துள்ளனா். அவா்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக உயா் அதிகாரிகள், காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவா்களைச் சந்தித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனா். அவா்களுக்கு தேவையான உடைகள், முகக்கவசங்கள், குளியலறை பொருள்கள், தின்பண்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளனா்.