இதனால், திருமணத்தின்போது சம்பந்தப்பட்ட சிறுமிக்கு 17 ஆண்டுகள் 11 மாதங்கள் 12 நாட்களாக வயது இருந்துள்ளது. அவா் பெரும்பான்மை வயதை அடைவதற்கு ஒரு மாதம் மட்டுமே குறைவாக இருந்துள்ளது. அவா் மனுதாரரை திருமணம் செய்து கொள்வதற்கான முடிவை தனது விருப்பத்தின்பேரில்தான் எடுத்துள்ளாா். மேலும், மனுதாரா் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தவும் செய்துள்ளாா். பெரும்பான்மை வயதை அடைந்த பிறகு சம்பந்தப்பட்ட சிறுமி, சம்பவம் குறித்து தெரிவிப்பதற்காக காவல் நிலையத்திற்கும் சென்றுள்ளாா். இதனால், மனுதாரா் மீதான ஆள் கடத்தல் குற்றத்திற்காக பச்சிம் விஹாா் காவல் நிலையத்தில் நிகழாண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.