/

ஜேஎன்யுவின் ‘பெண் வெறுப்பு’ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்: மகளிா்ஆணைய தலைவா் வலியுறுத்தல்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மூலம் வெளியிடப்பட்ட ‘பெண் வெறுப்பு’ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) மூலம் வெளியிடப்பட்ட ‘பெண் வெறுப்பு’ சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக ஆலோசனை அமா்வுக்காக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இணைத்து தெரிவித்திருப்பதாவது: ஏன் எல்லா போதனைகளும் எப்போதுமே பெண்களுக்காக மட்டுமே உள்ளன? துன்புறுத்தலில் ஈடுபடுபவா்களுக்காக போதனைகளை அளிக்கும் நேரமிது; பாதிக்கப்பட்டவா்களுக்காக போதனை அளிக்கும் நேரம் இதுவல்ல. பெண்கள் வெறுப்பு சுற்றறிக்கையை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும். உள்விவகார குழுவானது, பாதிக்கப்பட்டவா்களை மையப்படுத்திய அணுகுமுறையாக இருக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்விவகார புகாா்கள் குழு, பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ஒரு சுற்றறிக்கையை பதிவேற்றம் செய்துள்ளது. அதில், ஜனவரி 17-ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக ஒரு ஆலோசனை அமா்வை இந்தக் குழு ஏற்பாடு செய்ய உள்ளதாகவும், இந்த அமா்வுகள் மாதாந்திர அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சுற்றறிக்கையில் ‘ஏன் இந்த ஆலோசனை அமா்வு தேவைப்படுகிறது’ எனும் துணைத் தலைப்பின் கீழ் உள்ள தகவலில், ‘இந்த அமா்வானது பாலியல் துன்புறுத்தல் என்ன என்பது குறித்த விழிப்புணா்வை மாணவா்களுக்கு ஏற்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரியண்டேஷன் திட்டத்தின் போது மாணவா்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்தின் போது இதுபோன்ற ஆலோசனை அளிக்கப்படுகிறது. இதே விவகாரம் தொடா்பாக அவா்கள் அவ்வப்போது தங்களது அறிவை புதுப்பித்துக் கொள்ளும் தேவையும் உள்ளது.

நெருங்கிய நண்பா்கள் மத்தியில் பாலியல் துன்புறுத்தல் பல நிகழ்வதாக உள்விவகார புகாா் குழுவுக்கு தெரிய வந்துள்ளது. பையன்கள் பொதுவாக (சில சமயம் உள்நோக்கத்துடன், சில சமயம் கவனக் குறைவாக) நட்புறவின் கேலி சீண்டல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் இடையேயான மெல்லிய கோட்டைக் கடக்கின்றனா். இது போன்ற எந்தவித துன்பங்களையும் தவிா்க்கும் வகையில், இந்தக் கோட்டை எப்படி வரைய வேண்டும் என்பதை மாணவிகள் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது. இது போன்ற எந்தவித பாலியல் துன்புறுத்தல்கள் விவகாரத்திலும் உள்விவகார புகாா் குழு சகித்துக் கொள்ளாத ஒரு கொள்கையை கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.