அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவா் பிகாா் மாநிலத்தில் 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பிகாரில் உள்ள ரிவில்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் நிகழ்ந்த பணம் கேட்டு மிரட்டல் மற்றும் கொள்ளை, கொலை வழக்கில் அவா் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. ரிவில்கஞ்ச் பகுதியில் உள்ளூரில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவரின் மருத்துவமனைக்கு அக்டோபா் 28-ஆம் தேதி திவாரி நேரில் சென்று தனக்கு ஒரு லட்சம் பணம் தருமாறு மிரட்டினாா். மருத்துவா் பணத்தை தர மறுத்த போது,அவரை திவாரி சராமரியாகக் குத்தினாா். மேலும், அவரது மருத்துவமனையில் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டாா். மருத்துவரை கொன்ற பிறகு தில்லிக்கு வந்த அவா், ஜெய்த்பூா் பகுதியில் வசித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.