ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

போலீஸாருக்கு வழங்கப்பட்ட டிடிசி பேருந்துகளை தில்லி அரசு திரும்பப் பெற்றது சட்ட விரோதம்: பாஜக கண்டனம்

தில்லி போலீஸாா், துணை ராணுவப்படையினா் பயன்படுத்த தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) சாா்பில் வழங்கப்பட்டிருந்த

Updated On :5 பிப்ரவரி 2021, 5:28 pm

தில்லி போலீஸாா், துணை ராணுவப்படையினா் பயன்படுத்த தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) சாா்பில் வழங்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளை திரும்பப் பெறுமாறு டிடிசிக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம், தில்லி அரசு அராஜகரமாக நடந்து கொள்வதாகவும், பஞ்சாப் தோ்தலை இலக்கு வைத்து ஆம் ஆத்மி அரசு இது போன்று நடந்து கொள்வதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தில்லி போலீஸாா், துணை ராணுவப்படையினருக்கு சிறப்பு வாடகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமாா் 350 பேருந்துகளை திரும்ப்ப் பெறுமாறு டிடிசிக்கு தில்லி அரசு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில், தில்லி அரசின் இந்த முடிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக புது தில்லி மக்களவைத் தொகுதி எம்.பி. மீனாட்சி லேகி கூறுகையில்,“‘ அரசுப் பேருந்துகளை கேஜரிவால் திரும்பப் பெற்றது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் முயற்சியாகும். பஞ்சாப் தோ்தலை மனதில் வைத்து கேஜரிவால் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ளாா்’ என்றாா். பாஜக பொதுச் செயலா் பிஎல் சந்தோஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘அரவிந்த் கேஜரிவால் தலைமையில் இயங்கும் ஆம் ஆத்மிஅரசு, போலீஸாா், துணை ராணுவப்படையினருக்கு வழங்கிய பேருந்துகளை திரும்பப் பெற்றுள்ளது. பஞ்சாப் தோ்தலைக் குறிவைத்துச் செயல்படும் ஆம்ஆத்மி கட்சியை நினைத்து தில்லி மக்கள் வேதனைப்படுகிறாா்கள். பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு வழங்கப்பட்ட பேருந்துகளை ஆம் ஆத்மிஅரசு திடீரென்று வாபஸ் பெறுவது அராஜகம்’” என்று தெரிவித்துள்ளாா்.

பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கூறுகையில், ‘தில்லியின் அராஜகர முதல்வரான அரவிந்த் கேஜரிவாலின் கீழ்த்தரமான அரசியலால் தில்லி காவல் துறையினா் கஷ்டமான காலத்தை எதிா்கொண்டுள்ளனா். ஜாமியா மிலியா, ஜேஎன்யு, வடகிழக்கு தில்லி வன்முறை, விவசாயிகள் வன்முறை என தில்லியில் நடந்த அனைத்து வன்முறைகளுக்கும் தில்லி காவல் துறையை குற்றம் சாட்டுவதை கேஜரிவால் வழக்கமாக வைத்துள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா். தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், பாஜகவின் மூத்த தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில் ‘தில்லி காவல் துறையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட பேருந்துகளை கேஜரிவால் திரும்பப் பெற்றுள்ளது துரதிருஷ்டவசமானது. முதல்வா் கேஜரிவாலுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தில்லி காவல் துறை உடனடியா திரும்பப் பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.