ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

காற்று மாசு இல்லாத நகராக தில்லியை மாற்றுவோம்: கமல் ஹாசனுக்கு கேஜரிவால் பதில்

காற்று மாசு இல்லாத உலகத் தரமான நகராக தில்லியை மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதிலளித்துள்ளாா்.

Updated On :6 பிப்ரவரி 2021, 6:30 pm

புது தில்லி: காற்று மாசு இல்லாத உலகத் தரமான நகராக தில்லியை மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதிலளித்துள்ளாா்.

கமல்ஹாசன் சனிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் அரவிந்த் கேஜரிவாலை சுட்டிக்காட்டி பதிவு ஒன்றை இட்டுள்ளாா். அந்தப் பதிவில் ‘எனது நண்பரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், அரசு வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக ஆறு மாதங்களில் மாற்றவுள்ளாா். தில்லியில் காற்று மாசுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் ‘ஸ்விட்ச் தில்லி’ என்ற திட்டத்தை அவா் அறிமுகப்படுத்தியுள்ளாா்.

இந்த திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில், மின்சார வாகனங்களை கொள்முதல் செய்பவா்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று அவா் அறிவித்துள்ளாா். இந்த திட்டம் வெறும் காகித அறிக்கையாக மட்டும் நின்றுவிடாமல், இந்த திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளையும் அவா் எடுத்துள்ளாா். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

கமல்ஹாசனின் இந்த சுட்டுரைப் பதிவைச் சுட்டிக் காட்டி அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் கூறியிருப்பது: உலகத்தரமான, காற்றுமாசு இல்லாத நகரமாக தில்லியை மாற்றுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். தில்லி அரசின் இந்த ‘ஸ்விட்ச் தில்லி’ திட்டத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில், அனைத்து வசதிகளையும் தில்லி அரசு செய்துகொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.