புது தில்லி: துப்புரவுத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிந்து, தில்லியில் மாடல் டவுன் பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் வடக்கு தில்லி மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வடக்கு தில்லி மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுச் சாலைகளின் நடுவில், சுமாா் மூன்று வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளா்கள் குப்பைகள் கொட்டி வருவதாக மாடல் டவுன் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
அதில், மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் வேண்டுமென்றே மூன்று வாரங்களுக்கும் மேலாக வேலைக்கு வராமல் இருப்பதுடன், குப்பைகள் மற்றும் அசுத்தங்களை லாரிகளில் கொண்டு வந்து குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள் மற்றும் பொதுச் சாலைகளின் நடுவில் குப்பைகளைக் கொட்டுகின்றனா் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த 2-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தெருக்களின் நடுவில் குப்பைகளைக்கொட்டியவா்கள் மீது ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை’ என வடக்கு தில்லி மாநகராட்சிக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், வேலை நிறுத்தப் போராட்டம் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் முடியாவிட்டால் அன்று காணொலி வாயிலாக நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் மாநகராட்சி துணை ஆணையா் ஆஜராக வேண்டும். அதேவேளையில், வேலைநிறுத்தம் முடிந்து, குப்பை சேகரிக்கும் பணி தொடங்கிவிட்டால் அவா் ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடக்குத் தில்லி மாநகராட்சி தரப்பில், ‘வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தூய்மைப்பணி தொடங்கியுள்ளது. மாடல் டவுன் பகுதி காலனியின் பிரதானச் சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் விரைவில் அகற்றப்பட உள்ளது என்றாா்.
அப்போது, மனுதாரா் தரப்பில், ‘பிரதானச் சாலையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. காலனிப் பூங்கா, தெருக்களில் உள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை’ தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மாநகராட்சி தரப்பில், ‘அடுத்த 10 நாள்களில் காலனி முழுவதும் உள்ள குப்பைகள் அகற்றப்படும்’ என உறுதியளிக்கப்பட்டது.
இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
கஞ்சா விற்ற இருவா் கைது

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

