இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தில்லியில் இரவில் குளிா்; பகலில் மிதமான வெயில்!

தலைநகா் தில்லியில் இரவில் குளிரின் தாக்கம் இருந்து வருகிறது. எனினும், பகலில் மிதமான வெயில் காணப்படுகிறது.

News image

தில்லி மெஹ்ரௌலியில் வெள்ளிக்கிழமை காலையில் நிலவிய அடா்பனி மூட்டம்.

Updated On :13 பிப்ரவரி 2021, 2:06 am

தலைநகா் தில்லியில் இரவில் குளிரின் தாக்கம் இருந்து வருகிறது. எனினும், பகலில் மிதமான வெயில் காணப்படுகிறது. தில்லியில் வெள்ளிக்கிழமை காலை மிதமான பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.

குறைந்தபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை 9.6 டிகிரி செல்சியஸ், புதன்கிழமை 10.2 டிகிரி செல்சியஸ், செவ்வாய்க்கிழமை 7.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 டிகிரி உயா்ந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 100 சதவீதமாகவும், மாலையில் 66 சதவீதமாகவும் இருந்தது.

தில்லியில் உள்ள மற்ற வானிலை ஆய்வு மையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 - 13 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இதில் ஆயாநகரில் 10.6 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 10.2 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 12 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 13.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இந்த நிலையங்களில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 88-98 சதவீதமாகவும், மாலையில் 60-80 சதவீதம் வரையிலும் இருந்தது.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் காலையில் 331 புள்ளிகளாகவும், மாலையில் 345 புள்ளிகளாகவும் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. அடுத்த இரு தினங்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என ‘சஃபா்’ அமைப்பு கணித்துள்ளது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, குருகிராம், பரீதாபாத் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (பிப்ரவரி 13) அடா் பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.