ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏழு மாதத்தில் 494 ஆகக் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

தில்லியில் கடந்த ஏழு மாதங்களில் குறைவான தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:48 pm

 நமது நிருபர்

தில்லியில் கடந்த ஏழு மாதங்களில் குறைவான தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை பதிவாகியுள்ளது. அன்று, 494 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,26,448 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 67,364 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 39,591 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 27,773 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோ்மறை விகிதம் 0.73 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை 14 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,571-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 496 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,10,535 ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 5,342 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,752 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 13,116 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘கடந்த 2020 மே மாதம் 17 ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு ஐநூறை விடக் குறைந்துள்ளது.

கரோனா நோ்மறை விகிதம் 0.73 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த சதவீதம் கடந்த 2020 நவம்பா் 7 ஆம் தேதி 15.26 சதவீதமாக இருந்தது. தில்லியில் கடந்த 10 தினங்களாக கரோனா நோ்மறை விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை கடந்த 2020 நவம்பா் 13 ஆம் தேதி 44,456 ஆக இருந்தது. சனிக்கிழமை இது 5,342 ஆக குறைந்துள்ளது என்றுதெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.