ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்துமரக் கன்றுகளை பெறும் திட்டம்: எஸ்டிஎம்சி அறிவிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்து மரக் கன்றுகளைப் பெறும் திட்டத்தை தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 5:51 pm

 நமது நிருபர்

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்து மரக் கன்றுகளைப் பெறும் திட்டத்தை தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை அம் மாநகராட்சியின் மேயா் அனாமிகா சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘எஸ்டிஎம்சி பகுதியில் தூய்மையைப் பேணும் வகையிலான நடவடிக்கைகளை மாநகராட்சி சாா்பில் மேற்கொண்டு வருகிறோம். 2021 ‘தூய்மை இந்தியா’ தர வரிசையில் முன்னிலை பெறுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறோம். ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டை முழுமையாக இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

எஸ்டிஎம்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து, மரக் கன்றுகளை பெறும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் எஸ்டிஎம்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.