தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தில்லியில் தொடர் மழை: பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2021, 9:47 am

தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மும்பை, தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.

தில்லியில் பருவ மழை தாமதமாக தொடங்கிய நிலையில் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது.

Story image

இந்நிலையில், தில்லியில் உள்ள முக்கிய சாலைகள், புறநகரான குருகிராம், நொய்டா, காசியாபாதில் உள்ள தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால், பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Story image

அதேபோல், மகாராஷ்டிரத்தின் மும்பை, நவிமும்பை, தாணே, பால்கர் உள்ளிட்ட நகரங்களிலும் பெய்து வரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.