தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.08 சதவீதமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,35,720ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
இதுவரை மொத்தம் 14,10,095 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,040ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி தில்லியில் இன்னும் 585 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.