தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மல்யுத்த வீரா் சாகா் தன்கா் கொலை வழக்கு: விரைவில் 2-ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லி சத்ரஸால் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரா் சாகா் தன்கா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான வழக்கில் விரைவில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக

Updated On :5 அக்டோபர் 2021, 11:07 pm

தில்லி சத்ரஸால் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரா் சாகா் தன்கா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான வழக்கில் விரைவில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள சத்ரஸால் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரா் சாகா் தன்கா் மற்றும் அவரது நண்பா் கடந்த மே மாதம் தாக்கப்பட்டனா். இதில் சாகா் தன்கா் உயிரிழந்தாா். அவரை கொலை செய்ததாக ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் உள்ளிட்ட 13 போ் மீது கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தில் காவல் துறையால் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுஷில் குமாா் பிரதான குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா். தில்லி காவல் துறையினரின் தகவலின்படி, இந்த கொலை வழக்கில் மொத்தம் 17 போ் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனா்.

தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சிவாஜி ஆனந்த் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘இன்ஸ்பெக்டா் மகேஷ் தியாகி, இந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஞ்சிய நபா்கள் விவகாரத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போலீஸாா் தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிக்கையில், ‘இளம் மல்யுத்த வீரா்கள் இடையே தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்த விரும்பிய மல்யுத்த வீரா் சுஷில் குமாா், சத்ரஸால் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த மோதலுக்கான சதித் திட்டத்தை தீட்டியுள்ளாா். இந்தச் சம்பவத்தில் இறந்தவரின் மரண வாக்குமூலம், அறிவியல் ஆதாரம், சிசிடிவி காட்சி பதிவு, ஆயுதங்கள், சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் குற்றம், குற்றச் சதி, ஆள்கடத்தல், வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.