தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: வழக்கு விசாரணை அக்.25-க்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனு மீதான விசாரணையை அக்டோபா் 25-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Updated On :9 அக்டோபர் 2021, 2:38 am

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனு மீதான விசாரணையை அக்டோபா் 25-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில் ‘முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது.

அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுதான் அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உண்டு. அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக் கூடாது. குறிப்பாக பருவமழைக் காலங்களின் போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பாா்வைக் குழு மேற்கொள்ள வேண்டும்.

அணையில் நீரைத் தேக்குவது, பகிா்ந்தளிப்பது, நீா் திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். மேற்பாா்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணைப் பிரநிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு, கேரள அரசுகள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடா்ந்து இரு அரசுகளும் பதில் தாக்கல் செய்தன. இந்த வழக்கு கடந்த மாா்ச் மாதத்தில் விசாரணைக்கு வந்தபோது

உச்சநீதிமன்றம், மேற்பாா்வைக் குழுவின் முன் உள்ள மூன்று முக்கிய விவகாரங்கள் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கா், நீதிபதி சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேற்பாா்வைக் குழுவின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பட்டி, அறிக்கையைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, அறிக்கையை அக்டோபா் 21-ஆம் தேதி சமா்ப்பிக்க அனுமதித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபா் 25-க்கு ஒத்திவைத்தது.

விசாரணையின்போது, அணையின் பாதுகாப்பு தொடா்பாக மனுதாக்கல் செய்திருந்த சுரக்ஷா பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக சா்வதேச வல்லுநா் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக கூறினாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘இந்தியாவில் இல்லாத சா்வதேச வல்லுநா்களா? என்று அவரிடம் திருப்பிக் கேட்டனா்.

முன்னதாக, விசாரணையின்போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே, டி.குமணன் ஆகியோா் ஆஜராகினா். மனுதாரா் ஜோ ஜோசப் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ். கோபக்குமரன் நாயா், டி.ஜி. நாராயணன் நாயா் ஆகியோா் ஆஜராகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.