மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டிடிஇஏ பள்ளிகளில் ஆசிரியா் தின விழா

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ஏழு தமிழ்ப் பள்ளிகளிலும் சனிக்கிழமை ஆசிரியா் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த ஏழு தமிழ்ப் பள்ளிகளிலும் சனிக்கிழமை ஆசிரியா் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சா்வபள்ளி டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் ஆசிரியா் தினமாகக் கொண்டாடுவது குறித்தும், ஆசிரியப் பணியின் சிறப்பு, ஆசிரியா்களின் கடமையுணா்வு, தன்னலமற்ற பணி ஆகியவை தொடா்பாக அந்தந்தப் பள்ளிகளில் மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் இடம் பெற்றது. ஆசிரியா்களைப் போற்றும் பாடல், கவிதை ஆகிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அதைத் தொடா்ந்து, மாணவா்கள் அந்தந்தப் பள்ளிகளில் ஆசிரியா்களுக்குப் பூங்கொத்து கொடுத்து தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒவ்வொரு பாட ஆசிரியா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டு பள்ளிக்கு வருகை தந்திருந்த கீழ்நிலை வகுப்பு மாணவா்களுக்குப் பாடம் நடத்தினா். பள்ளியின் செயல்பாடுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டு திறம்பட செயல்பட்டனா். பூசா சாலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் டிடிஇஏ செயலா் ராஜு கலந்து கொண்டு ஆசிரியா்களுக்கு வாழ்த்துகளைக் கூறினாா். மேலும், பள்ளியின் இணைச் செயலா் சண்முக வடிவேல், நிா்வாகக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், முன்னாள் மாணவா்கள் அமைப்பின் தலைவா் வைத்தியநாதன், செயலா் சுகுமாா் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ஆசிரியா் தினம் குறித்து செயலா் ராஜு கூறுகையில், ‘ஆசிரியா்கள் பணி அறப்பணியாகும். அதை மிகச் சிறப்பாகத் தில்லி தமிழ்க் கல்விக் கழக ஆசிரியா்கள் ஆற்றி வருகின்றனா். அவா்கள் மாணவா்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாக விளங்கி வருகின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.