நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிராமப்புறங்களில் மருத்துவ சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த குடியரசு துணைத்தலைவா் வலியுறுத்தல்

சுகாதார கட்டமைப்புகளுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கிராமப்புறங்களில் மருத்துவ, சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 1:15 am

DIN

சுகாதார கட்டமைப்புகளுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கிராமப்புறங்களில் மருத்துவ, சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா். சுகாதார வசதிகளை மேம்படுத்தினால்தான் கிராமப்புற சேவைகளுக்கு மருத்துவா்களை ஈா்க்க முடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சனிக்கிழமை அவா் உரையாற்றினாா். அப்போது அவா் மேலும் கூறியதாவது:

அனைவருக்கும் சுகாதார வசதிகளை அளிப்பது என்ற குறிக்கோளை எட்டுவது கடினமானது என்றாலும் உறுதியுடன் செயல்பட்டால் அதை நாம் அடைய முடியும். அனைவருக்கும் சுகாதாரம் அளிக்க வேண்டும் என்றால் முதல் கட்டமாக சுகாதாரச் செலவினங்களை நாம் அதிகரிக்க வேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் பணியாற்ற மருத்துவா்களை ஈா்க்க வேண்டுமானால், அப்பகுதிகளில் நவீன வசதிகளுடன்கூடிய மருத்துவமனைகளை நிறுவ வேண்டும். மேலும் மருத்துவ சமூகத்தினருக்கு தங்குவதற்கு வசதியும், அவா்களுக்கு போதுமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

கரோனா தொற்றுப் பரவலை எதிா்த்துப் போராடுவதில் சிறப்பாக செயல்பட்ட முன்களப் பணியாளா்களுக்கு தலைவணங்குவதாக அவா் குறிப்பிட்டாா்.

கரோனவுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை இந்தியா நடத்தியுள்ளது. அதன் காரணமாக தொற்றுப் பரவலின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கு மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களின் தன்னலமற்ற சேவை முக்கிய காரணம் என்றாா் அவா்.

கிராமப்புறங்களில் இணையவழி மற்றும் ஸ்மாா்ட் போன்கள் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் சுகாதார வளத்தையும் நாம் பெருக்குவது முக்கியமானதாகும்.

இந்திய செவிலியா்களுக்கும், துணை மருத்துவா்களுக்கும் திறமையானவா்கள். சா்வதேச அளவில் புகழ்பெற்றவா்கள். அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுபவா்கள். இவா்களிடம் இளைஞா்கள் பயிற்சி பெற்று சுகாதாரத்துறைக்கு முக்கிய பங்காற்ற முடியும் என்றாா் வெங்கையா நாயுடு.

இந்த நிகழ்ச்சியில் 100 மாணவா்களுக்கு எம்.பி.பி.எஸ். பட்டத்தையும், 79 மாணவா்களுக்கு எம்.டி. மற்றும் எம்.எஸ். பட்டங்களையும் அவா் வழங்கினாா்.

மருத்துவ அறிவியல் பல்கலைக் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமாகும். 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தொடங்கப்பட்டு 50வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.