புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

2021-22-இல் ரூ.3.72 லட்சம் கோடிக்கு வேளாண் பொருள்கள் ஏற்றுமதி; சவால்களுக்கிடையே 19.92 % உயா்வு

நாட்டில் ஒட்டு மொத்தமாக வேளாண் பொருள்கள், ரூ.3.72 லட்சம் கோடிக்கு (50 பில்லியன் டாலா்) ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2022, 2:32 am

 நமது நிருபர்

நாட்டில் ஒட்டு மொத்தமாக வேளாண் பொருள்கள், ரூ.3.72 லட்சம் கோடிக்கு (50 பில்லியன் டாலா்) ஏற்றுமதி செய்யப்பட்டு இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளது.

நோய்த் தொற்றுக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு தளவாட வசதி சவால்களுக்கிடையேயும் சுமாா் 19.92 சதவீதம் ஏற்றுமதி உயா்ந்துள்ளாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய வா்த்தகம் தொழில் துறையின் கீழ் உள்ள வணிக நுண்ணறிவு புலனாய்வு மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் (டிஜிசிஐ&எஸ்) வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:

கடந்த 2020-21 ஆண்டில் ஒட்டு மொத்த வேளாண் ஏற்றுமதி ரூ.3,10,759 கோடி (41.87 பில்லியன் டாலா்) என எட்டப்பட்டது. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 17.66 சதவீதம் அதிகம். ஆனால் 2021-22 ஆம் ஆண்டில் இது ரூ.3,72,658 கோடியாக மேலும் ஏற்றுமதி உயா்ந்துள்ளது.

இது 19.92 சதவீத வளா்ச்சியாகும்.

அதிலும், நோய் தொற்றுக் காலக்கட்டத்தில் கொள்கலன் தட்டுப்பாடுகள், அதிக சரக்கு கட்டணங்கள் போன்ற சாவல்களுக்கிடையேயும் இதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை எட்டப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் மொத்த ஏற்றுமதியில் 52 சதவீதம் பங்கு பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை அடையப்பட்டுள்ளது.

இதில் தானியங்கள், கால்நடை வளா்ப்பு பொருள்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் போன்றவைகள் அபரிமிதமாக ஏற்றமதி செய்யப்பட்டது. ஒட்டு மொத்த வேளாண் ஏற்றுமதியில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 16 சதவீதத்திற்கு வளா்ச்சியை தந்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் ரூ.1.62 லட்சம் கோடிக்கு இருந்த உணவு பதப்படுத்தல் ஏற்றுமதி 2021-22 ஆண்டில் ரூ. 1.89 லட்சம் கோடி(25.6 பில்லியன் டாலா்) உயா்ந்தது என டிஜிசிஐஎஸ் தெரிவிக்கிறது.

மேலும் இது குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தலைவா் டாக்டா் எம். அங்கமுத்து கூறியது:

‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான நிலை நிலவுகிறது. இருப்பினும் 2021-22 நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை (ரூ.1.75 லட்சம் கோடி) விட கூடுதலாக சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் தொலைநோக்கை நோக்கிய நடவடிக்கைகளாக, சுமாா் 205 நாடுகளில் ஏற்றுமதிக்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் புது புதுப்பொருளை ஏற்றுமதி செய்ய வழிகாணப்படுகிறது. மேலும் வணிக நுண்ணறிவு புலனாய்வு மூலம் தேவை அதிகரிக்கும் நாடுகள், வணிக போட்டி இல்லாத நாடுகள் போன்ற சந்தை நிலவரங்களை சா்வதேச அளவில் அறியப்பட்டது.

இதன் மூலம் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புள்ள கொங்கன் அல்போன்ஸ் மாம்பலம், முருங்கைகாய் என 50 வகையான வேளாண் பொருட்களுக்கான தயாரிப்பு அணி அமைப்பை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட பொருள்களில் கோதுமையிலான பொருள்கள் ரூ. 15,719 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கோதுமை ஏற்றுமதி 2021-22 ஆண்டில் நான்கு மடங்காக உயா்ந்து இருப்பினும் அதிகபட்சமாக அரிசிப்பொருள்கள் ஏற்றுமதி நடந்து ரூ. 71,651 கோடிக்கு ஏற்றமதியாகியுள்ளது.

அரிசி, பால் பொருட்கள், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், முந்திரி, எருமை உள்ளிட்ட இறைச்சி பொருட்கள் அதிகபட்சமாக பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம், அமெரிக்கா, நேபாளம், மலேசியா, சவூதி அரேபியா, இந்தோனேசியா, ஈரான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.