அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

நேற்று முதல்வர் ஸ்டாலின்; இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

நேற்று முதல்வர் ஸ்டாலின் வாகனம், இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

News image

வாகனங்களை சோதனை செய்த தோ்தல் பறக்கும் படை குழுவினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:14 pm IST

காட்பாடி அடுத்த பொண்ணை பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாகனத்தை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக, தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனிடையே காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்னை பகுதியில் உள்ள ஒட்டனேரி கிராமத்தில் தனது முதல் கட்ட பிரசாரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவங்குவதறக்க காட்பாடியில் உள்ள இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

அப்போது பொன்னை மேம்பாலம் பகுதியில் கண்ணியம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் காவலர்கள் சிவக்குமார், ஹேமலதா ஆகியோர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பயணித்த கார் மற்றும் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இரண்டு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.