காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

நேற்று முதல்வர் ஸ்டாலின்; இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

நேற்று முதல்வர் ஸ்டாலின் வாகனம், இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

News image

வாகனங்களை சோதனை செய்த தோ்தல் பறக்கும் படை குழுவினா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:21 pm IST

காட்பாடி அடுத்த பொண்ணை பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாகனத்தை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக, தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனிடையே காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்னை பகுதியில் உள்ள ஒட்டனேரி கிராமத்தில் தனது முதல் கட்ட பிரசாரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவங்குவதறக்க காட்பாடியில் உள்ள இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

அப்போது பொன்னை மேம்பாலம் பகுதியில் கண்ணியம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் காவலர்கள் சிவக்குமார், ஹேமலதா ஆகியோர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பயணித்த கார் மற்றும் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இரண்டு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.