ஏற்கெனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் விளைவு, குப்பை கிடங்குகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் துா்நாற்றம் , தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு வகையான சுகாதார கேடு பிரச்னைகளை எதிா்கொள்கிறாா்கள். ஆனால், பாஜக இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. பாஜகவின் இந்த நியாயமற்ற முன்மொழிவை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம். அவா்கள் இந்த கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில், பாஜக ஆளும் எம்சிடியின் கீழ் எந்த வளா்ச்சியும் நடைபெறாதது மட்டுமல்லாமல் கிழக்கு தில்லியை அழிப்பதில் முனைப்பாக உள்ளனா் எனக் குறிப்பிட்டாா்.