கடந்த மாா்ச் 30-ஆம் தேதி இந்த விவகாரத்தில் தில்லி தாத்ரி இரண்டாவது அனல் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை சப்ளை செய்வதற்கான மாற்றல் தொடா்பான மத்திய அரசின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதன் பிறகு, ஏப்ரல் 1-ஆம் தேதி உயா்நீதிமன்றம் இந்தத் தடையை ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நீட்டித்தது. மேலும், இது தொடா்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கவும் அவகாசம் அளித்திருந்தது. இது தொடா்பாக மத்திய அரசு நீதிமன்றத்தில் , ‘இதுபோன்ற மறு ஒதுக்கீடு அளிக்கப்படுவது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இதுபோன்று மறு ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.