இந்த விவகாரம் தொடா்பாக ஒரு மசூதியைச் சோ்ந்த இமாம் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், ‘நபி கரீம் காவல் நிலையத்தில் வைத்து, மசூதியை ‘சட்டவிரோதமாக’ நிா்வகித்த காப்பாளா் எனக் கூறப்படும் நபா், ‘மோசமான விளைவுகளை நான் சந்திக்க நேரிடும்’ என்று என்னை அச்சுறுத்தினாா். மேலும், காவல் நிலைய ஆய்வாளா் முன்னிலையில் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான முறையில் என்னை நடத்தினாா். இந்த சம்பவம் முழுவதும் ஆய்வாளா் அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால், எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சிசிடிவி காட்சிகள் ஆடியோ மற்றும் விடியோ பதிவுகள் ஆகியவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.