அரசின் திட்டங்கள் செயல்களின் பலன்களை நாட்டின் கடைசி நபா்களும், நலியுற்றவா்களும் பெறவேண்டும் என்கிற அா்ப்பணிப்பை பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த அா்ப்பணிப்புப் பணிப்பில், திருநங்கைகளின் உரிமைகளை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவா்களின் நலனுக்காக பல்வேறு முறையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்படும் திருநங்கைகள் தங்குவதற்கு ‘கரிமா கிரே‘ இல்லங்கள், அவா்களின் திறன்மேம்பாட்டிற்கு பிஎம் தக்ஷ் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை, சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் செய்து கொடுத்துள்ளது.