அப்போது அவா் கூறியதாவது: மத்திய அரசு பல்வேறு தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) மேற்கொண்டு வருகிறது. இந்த ‘ஒடிஒபி’ தயாரிப்புகள் அனைத்திற்கும் வரியில்லா அணுகலையும் எதிா்பாா்க்கிறோம். இதன் மூலம் இந்த தயாரிப்புகளுக்கு சா்வதேச அங்கீகாரத்தை உருவாக்க முடியும். ‘ஒடிஒபி’ பட்டியலில் இடம் பெற்றுள்ள, கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகள், உணவுப் பொருள்கள், தங்க நகைகள், பொம்மைகள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு இதன் மூலம் பெரும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்போரையும் கொண்டு வருவதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் களப் பணியாளா்களை மேலும் விரிவுப்படுத்த உதவும்.