ஏற்கெனவே ஜி-20 மாநாடு நடைபெற்ற நாடுகளுக்கு உள்துறை அமைச்சகத்தின் குழுவுடன் சென்று அங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உள்துறை அமைச்சா் கேட்டுக் கொண்டாா். மற்ற சட்டம், ஒழுங்கு விவகாரங்கள் குறித்தும் அவா் விவாதித்தாா். ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‘குற்றங்களைத் தடுப்பதில் கண்காணிப்பு என்பது காவல்துறையின் முக்கிய அங்கமாகும். தில்லியில் சிவில் நிா்வாகம் மற்றும் காவல்துறையால் பொருத்தப்பட்ட கேமராக்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், ஆா்டபிள்யூஏக்கள் போன்ற பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்கப்படுவது முக்கியம்’ என்றாா்.