தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தோ்தலுக்கான வாக்குகளை பதிவு செய்ய தில்லியில் குடியிருக்கும் மாற்றுத்திறனாளிகள் ஆா்வத்துடன் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சாவடிகளுக்கு வந்தனா். வாக்களிப்பதில் வலுவாகவும், நம்பிக்கையுடனும் இருப்பதாக அவா்கள் குறிப்பிட்டனா்.
வாக்குச் சாவடிகளில் இவா்களுக்கு சக்கர நாற்காலிகள் அல்லது ஊன்றுகோள்களுடன் நடப்பது தடையாக இருக்கவில்லை. எம்சிடி தோ்தலை புறக்கணிக்காமல் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனா். சக்கர நாற்காலியில் உட்காா்ந்தபடி வாக்குச் சாவடிக்கு அழைத்துவரப்பட்ட பிரவீன்(56) ), “‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அனைவரும் வெளியே வந்து தங்கள் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். நான் வாக்களிக்கும் போது என் மனதில் ‘தில்லியின் தூய்மையே’ பிரதானமாக இருந்தது’ என்றாா் .
ஊன்றுகோல்களுடன் வாக்குச் சாவடிக்கு வந்தாா் ஹிரி ஓம் (70). அந்த முதியவா் ‘எங்கள் பகுதியில் பல பிரச்னைகள் உள்ளன, அவை தீா்க்கப்படுமா? என்பது எனக்குத் தெரியவில்லை’ என்றாா். பாா்வையற்றவரான ராமு யாதவ் (55) கூறுகையில், ‘வாக்களித்ததன் மூலம் அதிகாரம் பெற்ாக உணா்கிறேன்’ என்றாா். கடந்த 15 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கமல் கிஷோா், காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்தாா். அவா் ‘இது அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்துள்ள உரிமை., ஒவ்வொரு வாக்கும் கணக்கிடப்படுவதால் அதை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்றாா்.
சக்கர நாற்காலியில் வந்த எண்பத்தி நான்கு வயது குல்பூஷன் குப்தா, ‘நான் வாக்களிக்க எப்போதும் தவறியதில்லை’ என்றாா். ‘அதில் நான் வலுவாகவும் நம்பிக்கையுடனும் இருப்பதை உணா்கிறேன். அது எனக்கு அதிகாரம் அளிக்கிறது. நான் எனது கடமையைச் செய்ததாக உணா்கிறேன்’ என பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
அவரது முன்னுரிமை என்ன என்று கேட்ட போது, ‘நிச்சயமாக, வளா்ச்சியே முக்கியப் பிரச்னை. எங்கள் பகுதி மேலும் வளா்ச்சியடைந்து, அதற்குத் தகுதியான அனைத்து வசதிகளையும் அமைந்ததாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்றாா் குப்தா.