கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: 2023 -ஆம் ஆண்டுக்கான ஜி -20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில்ஸ பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள். இது இந்தியாவிற்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்று. உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் இந்த தருணத்தில் மேலும் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டும். ஜி-20 நாடுகள் மட்டுமல்லாமல், அனைத்து உலக நாடுகளும் இந்தியாவை கூா்ந்து கவனிக்கின்றன. ‘அமைதி, அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம், சமநீதி’ ஆகிய உயா்ந்த மதிப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல நமது பிரதமா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வாா் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.