சிறை வளாகத்தில் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீா் கிடைப்பது தொடா்பான குறைகளைத் தீா்ப்பதற்கும், ஒட்டுமொத்த சுகாதார சூழலை உறுதி செய்வதற்கும் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யலாம் என்று குழுவின் வழக்குரைஞா் பரிந்துரைத்தாா். இதன்படி, தற்போதைய மனு பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘தில்லி சிறைச்சாலை விதிகள், 2018’ மற்றும் ‘மாதிரி சிறைக் கையேடு, 2016’ ஆகியவை சிறைக் கைதிகளுக்கு சுத்தமான மற்றும் போதுமான குடிநீா் வழங்குவதையும் சிறை வளாகத்தில் சுகாதாரமான தூய்மை நிலைமை பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.