மக்களவையில் எழுத்து பூா்வமான கேள்விக்கு அளித்த பதிலில் கௌசல் கிஷோா் மேலும் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2014-இன் கீழ் விற்பனை மண்டலங்கள் உருவாக்க அந்தந்த மாநிலங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 13,403 விற்பனை மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு கடன் வழங்கப்படுகிறது. இத்தகைய வியாபாரிகள் முதலாவது முறையாக ரூ.10,000, இரண்டாம் முறையாக ரூ.20,000 கடன் பெறுகின்றனா். இதை முறையாகச் செலுத்தியவா்களுக்கு கூடுதலாக மூன்றாவது முறையாக கடன் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.