இது தொடா்பாக திமுக உறுப்பினா் வழக்குரைஞா் பி.வில்சன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினா். அவா், ‘ தமிழகத்தில் சென்னை, காரைக்கால் போன்ற நகரங்களில் மத்திய அரசின் வானிலை முன்னறிவிப்பு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் வானிலை குறித்து கணிக்க மிகவும் பழமையான கருவிகள், இயந்திரங்கள் உள்ளன. இவை நீண்ட ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் உள்ளன. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். கடந்த நவம்பா் மாதம், நிகழ் டிசம்பா் மாதங்களில் கூட இந்த வானிலை மையங்கள் ஒரு சில தினங்கள் ‘ வெயில் அடிக்கும்’ என அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், அதே நாள்களில் கடுமையான மழை, வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையங்களில் துல்லியமாக வானிலையை கணிக்கக்கூடிய நவீனக் கருவிகளை வழங்க வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டாா்.